100 பில்லியன் டாலர் முதலீடு முதல் 2 லட்சம் ஹஜ் பயணிகளுக்குக்கான அனுமதி வரை : சவுதி இளவரசரை இந்தியாவின் பக்கம் நிற்க வைத்த பிரதமர் மோடி
100 பில்லியன் டாலர் முதலீடு முதல் 2 லட்சம் ஹஜ் பயணிகளுக்குக்கான அனுமதி வரை : சவுதி இளவரசரை இந்தியாவின் பக்கம் நிற்க வைத்த பிரதமர் மோடி
இந்தியா வந்த சவுதி அரேபிய நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களை, பாரத பிரதமர் மோடி நேரில் விமான நிலையம் சென்று வரவேற்றார்.
பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் விமானத்தை விட்டு இறங்கியதும், அவரை கட்டித் தழுவி பிரதமர் மோடி வரவேற்றார். அதோடு "சவுதி அரேபிய இளவரசரை வரவேற்பதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது” என ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.
பிறகு, நேற்று குடியரசு தலைவர் மாளிகையில் அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை சவுதி இளவரசர் சல்மான் ஏற்றுக்கொண்டார்.
குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரைச் சந்தித்து சவுதி இளவரசர் சல்மான் ஆலோசனை நடத்தினார். அதன்பின் பிரதமர் மோடி, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இடையே முறைப்படியான பேச்சு நடந்தது. அதன்பின் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.
தீவிரவாதத்திற்கு எதிரான நிலைப்பாடு
ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த வாரம் நடத்தப்பட்ட கொடூரமான தீவிரவாத தாக்குதல், உலகம் முழுவதும் பரவியுள்ள தீவிரவாதத்தின் கொடிய அடையாளம் எனவும், இது மனிதகுலத்துக்கே பேராபத்து என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தீவிரவாதத்துக்கு ஆதரவு அளித்து வரும் நாடுகளுக்கு அனைத்து வகையான நெருக்கடிகளையும் அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. தீவிரவாதத்துக்கு உதவி செய்தலையும், வசதிகள் செய்துகொடுத்தலையும் முடிவுக்கு கொண்டுவருதல், தீவிரவாதிகளுக்கு உதவுபவர்களைத் தண்டித்தல் குறிப்பாக இளைஞர்கள் ஆயுதம் ஏந்தவிடமாமல் தடுத்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த விஷயங்களில் இந்தியாவுடன், சவுதி அரேபியா ஒப்புக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது என மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.