தமிழகத்தின் எல்லா மேஜர் பிரச்சினைகளுக்கும் காரணம் திமுக – காங்கிரஸ்தான்!! பட்டையை உரித்த பிரேமலதா விஜயகாந்த்!

தமிழகத்தின் எல்லா மேஜர் பிரச்சினைகளுக்கும் காரணம் திமுக – காங்கிரஸ்தான்!! பட்டையை உரித்த பிரேமலதா விஜயகாந்த்!

Update: 2019-04-15 12:24 GMT

தமிழின படுகொலை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து பிரச்னைக்கும் திமுக- காங்கிரஸ் கூட்டணியே காரணம் என்று பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.


சென்னை ரெட்டேரி பகுதியில் வடசென்னை மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் மற்றும் பெரம்பூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜேஷை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பிரதமர் வேட்பாளர் யார் என்றே அறிவிக்காமல் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உள்ளதாக விமர்சித்தார். 


தமிழின படுகொலை, காவிர உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து மிகப்பெரிய பிரச்னைக்கும் திமுக-காங்கிரஸ் கூட்டணியே காரணம் என்று குற்றம்சாட்டிய பிரேமலதா விஜயகாந்த், மோடி மீண்டும் பிரதமரானால் தமிழகத்தின் நலன் காக்கப்படும் என்று கூறினார்.


Similar News