அபகரிப்பு வழக்கில் திமுக எம்.பி ஜெகத்ரட்ச்கனுக்கு சம்மன் !! திமுகவை அச்சத்தில் உறைய வைத்த சிபிசிஐடி!!

அபகரிப்பு வழக்கில் திமுக எம்.பி ஜெகத்ரட்ச்கனுக்கு சம்மன் !! திமுகவை அச்சத்தில் உறைய வைத்த சிபிசிஐடி!!

Update: 2019-09-17 09:05 GMT

சென்னை, குரோம்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோல் தொழில் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தை அபகரித்ததாக ஜெகத்ரட்ச்கன் மீது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவருக்கு சிபிசிஐடி காவல்துறையினர் சென்னையில் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளனர்.


அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி.,யாக வெற்றி பெற்ற ஜெகத்ரட்சகன் திமுக மேலிட சகவாசத்தின் பேரில் திடீரென பெரும் கோடீஸ்வரர் ஆனவர். திமுக – காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த காலக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்கு அதிபராக உருவாகிய அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் உண்டு. இந்த நிலையில் ஜெகத்ரட்சன் மீது இந்த வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது திமுக நிர்வாகிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.


https://tamil.asianetnews.com/amp/politics/cbcid-summons-to-dmk-mp-jagathrakshan-pxyq4l


Similar News