நேற்று அவசரமாக அறிவாலயத்தில் நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய ஸ்டாலின் - ஆட்டம் காணும் தி.மு.க கூடாரம்? #DMK #TNBJP #MKStalin

நேற்று அவசரமாக அறிவாலயத்தில் நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய ஸ்டாலின் - ஆட்டம் காணும் தி.மு.க கூடாரம்? #DMK #TNBJP #MKStalin

Update: 2020-08-05 02:32 GMT

தி.மு.க தலைமை நிலையச்செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான கு.க.செல்வம் நேற்று மாலை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசினார். முன்னதாக இது குறித்து தகவல் நேற்று காலை முதலே வேகமாக பரவுது டங்கியது. இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு நேற்று காலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வந் தார்

கட்சியின் பொருளாளர் துரைமுருகன், அமைப்பு செயலா ளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோருடன் அவர் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கு.க.செல்வம் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக வெளியான தகவல் குறித்து, இதனை தொடர்ந்து கட்சியின் அடுத்தக்கட்ட நிலைப்பாடு குறித்தும் மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோருடன் மு.க.ஸ்டாலின் விவாதித்தார். இந்த அவசர ஆலோசனை கூட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்னும் சிலர் தி.மு.க'வில் இருந்து விலகி பா.ஜ.க'வில் இணைய போவதாக செய்திகள் வருகின்றன, இதுகுறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கட்சியில் உதயநிதியின் போக்கு நிறைய சீனியர் தலைவர்களுக்கு பிடிக்காமல் இருப்பதும் குறிப்பிடதக்கது.

Similar News