மருத்துவர்கள் வீட்டிற்கு வரக்கூடாது என மிரட்டல்.. யார் ? எங்கே ?

மருத்துவர்கள் வீட்டிற்கு வரக்கூடாது என மிரட்டல்.. யார் ? எங்கே ?

Update: 2020-04-07 10:27 GMT

கொரோனா வைரசால் பாதிப்படைந்து தற்போது சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களை வீட்டிற்கு வரக்கூடாது என்று அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் மிரட்டிக்கிறார்கள் என குஜராத் சேர்ந்த மருத்துவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

தன்னுடைய உயிரையே பெரிதாக கருதாமல் கொரோனாவை எதிர்த்து பணியாற்றும் மருத்துவர்களையும் , செவிலியர்களுக்கும் கடவுளாக நினைத்தாலும் தனிமையில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் அதிகம்.

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் மருத்துவர் சஞ்சீவனி. தற்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் வேலைபார்க்கும் மருத்துவர்களுக்கு பணி அழுத்தம் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் மருத்துவர்கள் வீட்டிற்கு வரக்கூடாது. மருத்துவம் பார்க்கும் எங்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் என அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு நினைத்து அச்சத்தில் உள்ளனர். அதனால் நங்கள் வீட்டிற்கு வரக்கூடாது என்று மிரட்டுகிறார்கள்.

இதனைக் குறித்து மருத்துவர் காவல் நிலையத்தில் எங்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும் என புகார் கொடுத்துள்ளார்.

Source: https://www.dinamani.com/india/2020/apr/07/not-coming-home-another-crisis-for-doctors-3396108.html

Similar News