முரசொலி மூலப்பத்திரத்தை குழிதோண்டி புதைக்கும் எடப்பாடி பழனிச்சாமி! அதிர்ச்சியூட்டும் பின்னணி தகவல்கள்!
முரசொலி மூலப்பத்திரத்தை குழிதோண்டி புதைக்கும் எடப்பாடி பழனிச்சாமி! அதிர்ச்சியூட்டும் பின்னணி தகவல்கள்!
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்ற உண்மை சமீபத்தில் வெளியானது. இதனை முதலில் வெளிப்படுத்தியவர் பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ். இதைத் தொடர்ந்து இது தொடர்பாக பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் சீனிவாசன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தார். அவருடன் தலித் சமுதாயத்தின் மூத்த தலைவரும், பாஜக மாநில செயற்குழு உறுப்பினருமான தடா.பெரியசாமியும், தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக 19.11.2019 அன்று நேரில் விளக்கமளிக்குமாறு உதயநிதி ஸ்டாலினுக்கு ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அவர் ஆஜராகாமல் அவருக்கு பதிலாக ஆர்.எஸ்.பாரதியை அனுப்பி வைத்தார். அவரும் முரசொலியின் மூலப்பத்திரத்தை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் சமர்ப்பிக்காமல், ஆணையத்தை மிரட்டுகிற தொனியில் ஒரு பித்தலாட்ட கடிதத்தை வழங்கிவிட்டு ஓடி விட்டார்.
அரசு தரப்பில் 1974-ஆம் ஆண்டுக்கு பிறகு உள்ள சில ஆவணங்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டன. இது இந்த நிலம் ஆதிதிராவிடரிடம் இருந்து மற்ற சமூகத்தினரிடம் கைமாறிய பிறகு உள்ள ஆவணங்கள் ஆகும். அந்த நிலத்தின் மூலப்பத்திரத்தையோ அல்லது அதற்கு நிகரான ஆதாரங்களையோ அரசு சார்பில் சமர்பிக்கவில்லை.
ஆனால் 1932-ஆம் ஆண்டிற்கான கெஜட் ஆதாரத்தை தடா.பெரியசாமி சமர்ப்பித்தார். இது தமிழக அரசிடம்கூட இல்லை என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதனுடைய நகல் தமிழக அரசுக்கும் வழங்கப்பட்டது. இது தொடர்பாக மேலும் பல ஆவணங்களையும் தடா.பெரியசாமி வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் அடுத்த கட்ட விசாரணையை 07.01.2020 அன்று டெல்லியில் உள்ள லோகநாயக் பவனில் அமைந்துள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் அலுவலகத்தில் நடத்தியது. இதில் ஆஜராகுமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது.