நாட்டின் பிரதமராக மோடியை தேர்ந்தெடுக்க முன்மொழிந்த தமிழன்! வரலாற்றில் முதன்முறை?
நாட்டின் பிரதமராக மோடியை தேர்ந்தெடுக்க முன்மொழிந்த தமிழன்! வரலாற்றில் முதன்முறை?
நேற்று பா.ஜ.க-வில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி-க்களுக்கான கூட்டம் பாராளமன்றத்தில் நடைபெற்றன. இக்கூட்டத்தில் பா.ஜ.க தலைவர்கள், முதல்வர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இக்கூட்டத்தில் தமிழகத்தின் பா.ஜ.க-வின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க சார்பில் முதல்வர் பழனிச்சாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் கலந்துக் கொண்டர்.
இக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பின் பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இம்முடிவை தமிழக முதல்வர் பழனிச்சாமி முன்மொழிந்தது தான் தமிழகத்திற்கு அளிக்கப்பட்ட பெருமை.
ஆக, வரலாற்றில் முதன்முறையாக பாரத பிரதமரை ஒரு தமிழன் முன்மொழிந்துள்ளார் என மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் தெறிக்க விடப்படுகின்றன.