சென்னை முத்தியால்பேட்டை மசூதி ஒன்றில் தங்கி இருந்த எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த 8 பேர் கைது! பல நாட்கள் தலைமறைவானது அம்பலம்!
சென்னை முத்தியால்பேட்டை மசூதி ஒன்றில் தங்கி இருந்த எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த 8 பேர் கைது! பல நாட்கள் தலைமறைவானது அம்பலம்!
தில்லியில் நடைபெற்ற "தனியார்" மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, மத பிரசாரத்துக்காக சென்னையில் தங்கியிருந்த எத்தியோப்பியா, மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
8 Ethiopian religious preachers who were hiding in a mosque in George Town, Chennai arrested.
— SG Suryah (@SuryahSG) April 13, 2020
சென்னை முத்தியால்பேட்டை மசூதி ஒன்றில் தங்கி இருந்த எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த 8 பேர் கைது.
தில்லியின் நிஜாமுதீன் பகுதியில் அண்மையில் "தனியார்" அமைப்பின் மாநாடு நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து சுமாா் 8 ஆயிரம் போ் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. மேலும் அமெரிக்கா, இந்தோனேஷியா, வங்கதேசம், மலேசியா, இலங்கை, பிலிப்பின்ஸ், பிரிட்டன், சீனா, எத்தியோப்பியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் 960 போ் போ் பங்கேற்றனா்.இந்த மாநாட்டில் பங்கேற்ற சிலருக்கு ஏற்கெனவே கரோனா தொற்று இருந்ததினால், மாநாட்டில் பங்கேற்ற பிறருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டது.
அதேவேளையில், மாநாட்டில் பங்கேற்ற பலா் சொந்த ஊா்களுக்குத் திரும்பினா். மேலும் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாடுகளைச் சோ்ந்த மத பிரசாரகா்கள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு மத பிரசாரத்துக்காகப் பயணம் செய்தனா்.இந்த மாநாட்டில் பங்கேற்றவா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அவா்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது. சிலா், சிகிச்சை பெறுவதற்கு மருத்துவமனைக்கு வராததினால், அவா்களை கண்டறிவதில் அரசுக்கு சிரமம் ஏற்பட்டது.