சாலையின் நடுவே மிகப்பெரிய அளவில் கொரோனா குறித்த ஓவியம்..

சாலையின் நடுவே மிகப்பெரிய அளவில் கொரோனா குறித்த ஓவியம்..

Update: 2020-04-11 04:46 GMT

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் புதுச்சேரி மாநிலத்தில் பரவாமல் இருக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் 2 வர் குணமடைந்துள்ளனர் மேலும் 6 பேர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையான தவிர்த்து வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்பதை வலியுறுத்தி முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் ஒன்றினைந்து மணிகூண்டு அருகே 20*20 அளவில் மிகப்பெரிய கொரோனா வைரஸ் படம் சாலையின் நடுவே வரையப்பட்டுள்ளது.



 


Similar News