வந்தாரை வாழ வைப்பது தமிழகம் மட்டுமல்ல,ஹரியானாவும்தான் - தமிழில் பேசி அசத்தும் ஹரியானா முதல்வர் மனோஹர்லால் கட்டார்!!

வந்தாரை வாழ வைப்பது தமிழகம் மட்டுமல்ல,ஹரியானாவும்தான் - தமிழில் பேசி அசத்தும் ஹரியானா முதல்வர் மனோஹர்லால் கட்டார்!!

Update: 2019-10-17 06:44 GMT


ஹர்யானாவின் முதல்வர் மனோகர் லால் கட்டார். அவர் மீண்டும் இன்னும் சில நாட்களில் தேர்தலை சந்திக்கவுள்ளார். இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த தேர்தல் சம்மந்தமாக தந்தி தொலைக்காட்சிக்கு ஒரு நேர்காணல் அளித்தார் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார். அதில் அவருக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தமிழில் பதில் சொல்லி அசத்தினார். அதற்கு முன்பும் ஹரியானாவில் சில மேடைகளில் தமிழில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




https://youtu.be/OzsTQldHP3g


அந்த பதிவில் அவர் அகர முதல எழுத்தெல்லாம் என்று திருக்குறளை கூறி தனது பேச்சை தொடங்கினார். வந்தாரை வாழவைப்பது தமிழகம்  à®ªà¯‹à®²à¯ ஹரியானாவும் வந்தாரை வாழவைக்கும் மாநிலம் என்று கூறினார். அதே போல் தமிழ் மக்கள் அவர் மீது மிகுந்த பற்றுடையவர் என்றும் சண்டிகரில் உள்ள தமிழ் சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்றும் கூறினார்.


வட இந்தியாவிலிருந்து ஒரு முதல்வர் நன்றாக தமிழில் பேசுவது சமூக வலைத்தளங்களில் வரவேற்பும் பாராட்டும் பெற்று வருகிறது. 


நன்றி தந்தி டிவி.


Similar News