H ராஜா தலைமையில் நடந்த இந்து கோவில்கள் மீட்பு உண்ணாவிரதத்திற்கு இஸ்லாமியர்கள் உட்பட 2000 பேர் ஆதரவு
H ராஜா தலைமையில் நடந்த இந்து கோவில்கள் மீட்பு உண்ணாவிரதத்திற்கு இஸ்லாமியர்கள் உட்பட 2000 பேர் ஆதரவு
By - Kathir Webdesk
Update: 2018-09-02 13:09 GMT
தமிழகத்திலுள்ள கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களை பாதுகாப்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார் பா.ஜ.க தேசிய செயலாளர் திரு. H ராஜா.
இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
[caption id="attachment_2888" data-align="alignnone" data-width="275"]
உண்ணாவிரதத்திற்கு பல தரப்பு மக்களும் ஆதரவு அளித்துள்ளனர். இரண்டாயிரதிற்கும் மேற்பட்ட பொது மக்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழக பா.ஜ.க தலைவர் Dr. தமிழிசை அவர்கள் நேரில் சென்று தன்னுடைய ஆதரவை பதிவு செய்தார்.
[caption id="attachment_2890" data-align="alignnone" data-width="300"]
இந்து மக்கள் கட்சி தலைவர் திரு. அர்ஜுன் சம்பத், இந்து முன்னணி தலைவர் வீரத்துறவி திரு.ராம கோபாலன் ஜி அவர்கள், தமிழக பா.ஜ.க-வை சேர்ந்த திரு. கே.டி.ராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, இந்து கோவில்களை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கும் நோக்கில், இஸ்லாமியர்களும் இந்த உண்ணாவிரதத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர்.
[caption id="attachment_2891" data-align="alignnone" data-width="278"]
Similar News
Copyright @2023
Powered by Hocalwire