“கர்நாடகாவில் இன்னும் எத்தனை காலம்தான், இந்த அரசு காலம் தள்ள போகிறதோ?” - தேவகவுடா புலம்பல்!!
“கர்நாடகாவில் இன்னும் எத்தனை காலம்தான், இந்த அரசு காலம் தள்ள போகிறதோ?” - தேவகவுடா புலம்பல்!!
கர்நாடகாவில் இன்னும் எத்தனை காலம் இந்த அரசு காலம் தள்ள போகிறது என எனக்கு தெரியவில்லை என முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி நிறுவனருமான தேவகவுடா கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: -
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு இன்னும் எத்தனை காலம் தாக்குப்பிடிக்க போகிறதோ எனக்கு தெரியவில்லை. காங்கிரசின் முடிவை பொறுத்தே அது உள்ளது. விரைவிலேயே கர்நாடகாவில் தேர்தல் வரலாம். கூட்டணியை நல்ல முறையில் கொண்டு செல்லவதற்கு தேவையான அனைத்தையும் குமாரசாமி செய்து வருகிறார். காங்கிரசுக்காக நாங்கள் ஒரு அமைச்சர் பதவியை தியாகம் செய்துள்ளோம்.
இந்த ஆண்டு மத்தியிலேயே தேர்தல் வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எங்களுக்கு 5 ஆண்டுகள் ஆதரவு தருவதாக அவர்கள் கூறினார்கள். தற்போது அவர்கள் நடந்து கொள்வதை நீங்களே பாருங்கள். எங்கள் கட்சியினர் மிக கண்ணியமாக நடந்து வருகின்றனர்.
இவ்வாறு தேவகவுடா கூறினார்