"தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அந்தக் கணமே தமிழகம் மயானம் ஆகிவிடும்" - கிழித்து தொங்கவிட்ட தமிழருவி மணியன்!
"தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அந்தக் கணமே தமிழகம் மயானம் ஆகிவிடும்" - கிழித்து தொங்கவிட்ட தமிழருவி மணியன்!
சென்னையில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தமிழருவி மணியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சி என்றாலே தீண்டத்தகாதது என்று நினைக்கும் திராவிட முன்னேற்றக் கழகம், 1999 பாராளுமன்ற தேர்தலில், இதே பாரதிய ஜனதா கட்சியுடன்தான் கூட்டணி வைத்தது திராவிட முன்னேற்றக் கழகம். 1998-இல் முதன்முதலாக ஜெயலலிதா வாஜ்பாய்க்கு ஆதரவு கரம் நீட்டினார். பாரதிய ஜனதா கட்சியுடன் அவர் கூட்டணி வைத்தார்.
அப்போது கருணாநிதி பேசிய பேச்சுக்களை எல்லாம் முரசொலி பத்திரிகையிலும் மற்ற பத்திரிகைகளிலும் எடுத்துப் படித்துப் பாருங்கள். ஸ்டாலின் படிக்க மாட்டார். அது எனக்கு தெரியும். நீங்களாவது படித்து பாருங்கள்.
கருணாநிதியை நான் சந்தித்தபோது ஒருமுறை என்னிடம் “வாசிப்பு என்பது எனது கட்சியில் எவரிடமும் இல்லை” என்றார். அதைவிட சிரித்துக் கொண்டே சொன்னார், “முரசொலியே இவர்கள் படிக்க மாட்டேங்கிறான்” என்றார். “என்னை வந்து சந்திக்கும் அமைச்சர்களையோ, மாவட்டச் செயலாளர்களையோ முரசொலி படிக்கிறார்களா என்று கேட்பேன். அதற்காக அவர்கள் அன்றைய முரசொலியை மட்டும் படித்து விட்டு வருவார்கள். நான் விடமாட்டேன். அவர்களிடம் நேற்றைய முரசொலியில் நான் எழுதியதை கேட்டால் அவனுக்கு தெரியாது” என்றார்.
அவர்களுக்கு படிக்க ஏது நேரம். கொள்ளை அடிப்பது எப்படி என்பதை கலையாக கற்ற கூட்டம் அல்லவா அது.
மீண்டும் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி மட்டும் தமிழகத்தில் அமைந்தால், ரஜினிகாந்த் சொன்னதை நான் மாற்றி சொல்கிறேன், போராட்டங்களால் நாடு சுடுகாடு ஆகும் என்று சொன்னார் அவர். திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அந்த கணமே மயானம் ஆகிவிடும் தமிழகம்.
2006 முதல் 2011 வரை, அவனவன் சொத்தை அவனவன் காப்பாற்ற முடிந்ததா? சொந்த சொத்தைகூட காப்பாற்ற முடியவில்லையே? சொத்தை இங்கே விட்டுவிட்டு அமெரிக்காவிற்கு சென்று இருப்பான். அவன் திரும்பி வந்து பார்த்தால், அவனது சொத்தில் வேறு எவனோ கட்டிடம் கட்டிக் கொண்டு இருப்பான். ஆயிரம் ஏக்கர் நிலங்களை, நில அபகரிப்பு சட்டத்தின் மூலம் ஜெயலலிதா மீட்டு கொடுத்துள்ளார். ஊரை அடித்து உலையில் போடுவதில் உங்களைவிட தேர்ந்த மனிதர்கள் யாருமே கிடையாது.