சிறப்புக் கட்டுரை : சீனாவுக்கு பதிலடி கொடுக்க கடற்படை வலிமையை மேம்படுத்தி வரும் இந்தோ- பசிபிக் நாடுகள்.!
அனைத்து நாடுகளும் சீனாவின் ஆக்கிரமிப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் தங்களுடைய கடற்படை வலிமையை மேம்படுத்தி வருகின்றன.
தன்னுடைய ஆக்கிரமிப்பு கொள்கைகளுக்காக உலக நாடுகள் அனைத்தாலும் நிராகரிக்கப்பட்டுள்ளது சீனா. இதன் காரணமாக சீன ராணுவம் மூர்க்கத்தனமாக மாறியுள்ளது. இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் தெற்கு சீன பகுதி முதல் கிழக்கு சீன பகுதி மற்றும் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் என, அனைத்து நாடுகளின் உரிமைகளையும் பறிக்கத் சீனா முயற்சித்து வருகிறது.
இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு நாடும் சீனாவை அச்சுறுத்தலாகப் பார்க்க துவங்கி உள்ளன. இதனால் மூர்க்கத்தனமான சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தங்களுடைய கப்பற்படை ஆயுத வசதிகளை மேம்படுத்தி வருகின்றன.
இந்தியா, ஆஸ்திரேலியா, வியட்நாம், தைவான், ஜப்பான் மற்றும் தென் கொரியா என அனைத்து பெரிய நாடுகளும் சீனாவின் ஆக்கிரமிப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் தங்களுடைய கடற்படை வலிமையை மேம்படுத்தி வருகின்றன.
சமீபமாக இந்த நடவடிக்கை எடுத்த நாடு தென் கொரியா. விமான தாங்கிகளை தன்னுடைய கப்பல் படையில் சேர்க்க தென்கொரியா முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் படி தென்கொரியா 20f தட்டி பி ரகசிய ஜம் ஜெட்டுகளை தட்டுகளை வாங்க திட்டமிட்டு வருகிறது. தென் கொரியா விமான தாங்கி வாங்க நடவடிக்கை எடுக்கலாம் என்பதற்கு இதுதான் அறிகுறி. பொதுவாக தென்கொரியா தன்னுடைய வளங்களை தரைப்படைக்கும் , விமானங்களுக்கும் மட்டுமே செலவிட்டு வந்தது. இதற்கு முக்கிய காரணம் தென் கொரியாவிற்கு இராணுவ அச்சுறுத்தல் வட கொரியா நாட்டில் இருந்துதான் வருகிறது. வடகொரியாவில் ஒரு மிகப் பெரியத் தரைப்படை தென் கொரியாவிலிருந்து 30 மைல்களில் உள்ளது
இப்போது முக்கியத்துவம் கப்பல் படைக்கு மாறுவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. சமீப காலங்களில் மஞ்சள் கடலில் சீனாவுடன் சில பெரிய பிரச்சினைகளை தென்கொரியா சந்தித்து வருகிறது. சீனா மற்றும் தென் கொரியா இரண்டு நாடுகளுமே Exclusive Economic Zone எனப்படும் மஞ்சள் நதியில் 200 நாட்டிகள் மைல் தொலைவில் உள்ள பகுதியை தங்களுடையது என உரிமை கொண்டாடுகின்றனர்.
தென்கொரியா,சீனா இரண்டு நாடுகளுமே ஐக்கிய நாடுகள் கடல் சபையில் (UNCLOS) உறுப்பினர்களாக இருப்பதால் அவர்களின் கடல் எல்லை ஒரு பொதுவான கொள்கையால் தீர்மானிக்கப்பட வேண்டும். ஆனால் சீனா பட்டவர்த்தனமாக இதை மீறி தென்கொரிய கடல் பிராந்தியத்திற்கு சொந்தமான பகுதிகளை தங்களுடையது என உரிமை கொண்டாடுகிறது.