100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் இப்படியும் ஒரு மோசடியா?அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை
இறந்தவர் பெயரை 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் சேர்த்து மோசடி
இறந்த பெண்ணின் பெயரை 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் சேர்த்து முறைகேடு செய்த அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வசேகரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் எனது அம்மா அமராவதி கடந்த 2007 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி முதுமையின் காரணமாக மரணமடைந்தார். ஆனால் அவரது பெயரை 100 நாள் வேலை திட்டத்தில் சேர்த்து ஊதியத்தை அவரது வங்கி கணக்கில் செலுத்தி உள்ளனர்.
அந்த தொகையை எடுப்பதற்காக என் அம்மாவின் வங்கி கணக்கு ஏ.டி.எம். கார்டு கேட்டு கிராம பஞ்சாயத்து செயலாளர் என்னை மிரட்டினார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே என் புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.டி .
டீக்காராமன் இந்த புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்த திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டார்.
இதன்படி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த துணை சூப்பிரண்டு மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு உண்மை என்று அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது மனுதாரரின் அம்மா அமராவதி கடந்த 2020 ஆம் ஆண்டே இறந்து விட்டார்.ஆனால் அவரது பெயர் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் உள்ளது. அவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
ஆனால் இதே புகாருக்கு மாவட்ட கலெக்டர் ,வந்தவாசி மண்டல உதவி செயற்பொறியாளர் விசாரணை அதிகாரியாக நியமித்து விசாரணை நடத்த கடந்த மார்ச் 7ஆம் தேதி உத்தரவிட்டுள்ளார்.