18,000 அடி உயரத்தில், பனிமலைகளில் I.T.B.P பாதுகாப்பு படையினர் யோகா பயிற்சி..! #InternationalYogaDay #YogaDay #MyLifeMyYoga

18,000 அடி உயரத்தில், பனிமலைகளில் I.T.B.P பாதுகாப்பு படையினர் யோகா பயிற்சி..! #InternationalYogaDay #YogaDay #MyLifeMyYoga

Update: 2020-06-21 02:57 GMT

இன்று சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், எல்லை பகுதிகளில் உள்ள பாதுகாப்பு படையினரும் யோகா பயிற்சி செய்து வருகின்றனர். கொரோனா தொற்று நோய் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வரும் நிலையில், யோகா-வின் தேவையை உலகம் இன்று உணர்ந்து வருகிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று நோய் சுவாசம் சம்பந்தப்பட்ட பாதிப்புகளை தரும் நிலையில், பிராணாயமம் செய்வதால் சுவாசம் மற்றும் இருதயம் உறுதியாக இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், இந்திய எல்லை பகுதிகளில் உள்ள Indo Tibetan Border Police (I.T.B.P) பாதுகாப்பு படையினர் பனிக்கட்டிகளால் சூழப்பட்ட மலைப்பகுதிகளில் யோகா பயிற்சி செய்துள்ளனர். 18,000 அடி உயரமுள்ள லடாக் பனிமலைப் பகுதிகளில் I.T.B.P பாதுகாப்பு படையினர் யோகா பயிற்சி செய்யும் புகைப்படங்களை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

அதே போல உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் பகுதியில் 14,000 அடி உயரத்தில் அமைந்துள்ள வசுதரா பனிமலையில் I.T.B.P பாதுகாப்பு படையினர் யோகா பயிற்சி செய்துள்ளனர். 

நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களும் இன்று யோகா பயிற்சி செய்து புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். 

Similar News