பிரதமரின் வேண்டுகோளை ஏற்று அகல்விளக்கு ஏற்றிய அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி.!

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று அகல்விளக்கு ஏற்றிய அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி.!

Update: 2020-04-06 03:06 GMT

கொரோனா என்ற இருள் விளக பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் வரைக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் விளக்கு, செல்போன் லைட், மெழுகுவர்த்தியை ஏற்றுமாறு கூறியிருந்தார்.

அவரின் வேண்டுகோளை ஏற்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் அகள் விளக்கு ஏற்றினார்.

அதே போன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அகள் விளக்கு, மெழுகுவர்த்தி, போன்றவைகளை ஏற்றி தங்களது ஒற்றுமையை இந்த தேசத்திற்கு வெளிப்படுத்தினர்.

மேலும், இளைஞர்கள் செல்போன் டார்ச் லைட்டை ஒளிர செய்தனர்.

Similar News