உள்ளாட்சித் தேர்தல் முடிவால் அதிர்ந்தது தி.மு.க! குடியுரிமை திருத்த சட்டத்திற்கு திடீர் ஆதரவு! அந்தர் பல்டியின் அதிர்ச்சி பின்னணி!
உள்ளாட்சித் தேர்தல் முடிவால் அதிர்ந்தது தி.மு.க! குடியுரிமை திருத்த சட்டத்திற்கு திடீர் ஆதரவு! அந்தர் பல்டியின் அதிர்ச்சி பின்னணி!
பாராளுமன்றத்தில் தேசிய குடியுரிமை திருத்த சட்ட மசோதா கொண்டு வந்தபோது இரு அவைகளிலும் திமுக கடுமையாக எதிர்த்தது. அது சட்டமாக்கபட்ட பிறகும் எதிர்த்து குரல் எழுப்பி வந்தது.
“இந்த சட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு துரத்தி விடுவார்கள்” என்று தவறான பிரச்சாரத்தை அப்பாவி முஸ்லிம்கள் மத்தியில் திட்டமிட்டே திமுக பரப்பியது. அவர்களை போராட்டத்திற்கு தூண்டியது. திமுகவின் உண்மையான நோக்கமே கலவரம் நடக்க வேண்டும், அதில் பலர் சாக வேண்டும், அதை வைத்து அரசியலில் பிழைப்பு நடத்த வேண்டும் என்பதுதான்.
இதற்காக பல முனைகளில் போராட்டங்களை தூண்டி வந்தது. சென்னையில் பிரம்மாண்ட பேரணிகளையும் நடத்தியது.
இதன் மூலம் திமுக கூட்டணிக்கு உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்று திமுக கனவு கண்டது. ஏற்கனவே கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது திமுக தமிழகத்தில் மொத்தமுள்ள 39 இடங்களில் 38 இடங்களை கைப்பற்றி அசுர சாதனை படைத்து இருந்தது. எனவே திமுக, உள்ளாட்சித் தேர்தலில் குறைந்தபட்சம் 80 சதவீத இடங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திமுகவின் கனவில் மண் விழுந்தது. ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் தேர்தலில் மொத்தமுள்ள 5090 இடங்களில் திமுகவால் 2099 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இது மொத்தம் உள்ள இடங்களில் 41 சதவீதமாகும். அதாவது மு.க.ஸ்டாலின் எதிர்பார்ப்பதில் பாதியைகூட நிறைவேற வில்லை என்பதே உண்மை.
திமுகவின் இந்த மாபெரும் இழப்பிற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தபோதுதான் மு.க.ஸ்டாலினுக்கு அதிர்ச்சியூட்டும் தகவல் காத்திருந்தது. முக்கியமாக திமுகவின் இந்து விரோத போக்கு அதனுடைய ஓட்டு வங்கியை பதம் பார்த்துவிட்டது என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்த நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தேசிய குடியுரிமை சட்டத்தை கண்மூடித்தனமாக வேண்டுமென்றே முஸ்லிம்களின் ஓட்டுக்காக திமுக எதிர்த்ததை, பெரும்பான்மை ஹிந்து சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை. திமுகவிற்கு ஆதரவான இந்துக்களும் இதனை விரும்பவில்லை.