புதுப்பொலிவுடன் தகவல் ஒலிபரப்பு அமைச்சக இணையதளம்!

தகவல் ஒளிபரப்பு அமைச்சக இணையதளம் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மத்திய மந்திரி அனுராக்சிங் தாகூர் தொடங்கி வைத்தார்.

Update: 2024-02-23 04:59 GMT

தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மந்திரி அனுராக்சிங் தாக்கூர் இந்தியாவில் ஊடகத்துறையில் புரட்சியை ஏற்படுத்துவதாக உறுதியளிக்கும் நான்கு உருமாற்ற இணையதளங்களை நேற்று தொடங்கி வைத்தார். இந்த முன் முயற்சியானது செய்தித்தாள் வெளியிட்டார்கள் மற்றும் டெலிவிஷன் சேனல்களுக்கு மிகவும் சாதகமான வணிக சூழலை வளர்த்து எளிதாக வணிகம் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அரசாங்க தகவல் தொடர்புகளில் வெளிப்படைத் தன்மை மற்றும் செயல் திறனை மேம்படுத்துதல், உண்மையான அரசாங்க வீடியோக்களை எளிதாக அணுகுதல் மற்றும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களின் விரிவான தரவு தளத்தை உருவாக்குதல், எதிர்காலத்தில் கேபிள் டி.வி துறையில் ஒழுங்குமுறை செயல்முறைகளை ஒழுங்குபடுத்தலில் அரசுக்கு உதவுகிறது. நிகழ்ச்சியில் மத்திய மந்திரி அனுராக்சின் தாக்கூர் பேசுகையில், "இன்று இந்தியா முதலீட்டுக்கான கவர்ச்சிகரமான இடமாக பார்க்கப்படுவதாகவும் உலக நிறுவனங்கள் இங்கு தொழில்களை தொடங்க ஆர்வமாக உள்ளது. இந்தியாவில் வணிகம் செய்வது எளிதாக்குவது பெரிதும் மேம்படுத்தி உள்ளது. மேலும் இது ஏற்கனவே உள்ள வணிகங்கள் மற்றும் புதிய தொழில் முனைவோர் ஆகியோரிடம் இருந்து முதலீடுகளை அதிகரிக்க வழி வகுத்தது. ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பு குறிப்பாக ஸ்டார்ட்-அப்கள் மற்றும் யூனிகார்ன்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்புடன் செழித்துள்ளது". இவ்வாறு அவர் பேசினார்.

SOURCE :Dailythanthi

Similar News