சுந்தர் சி க்கு அதிர்ச்சி தந்த 'மிர்ச்சி' சிவா.!

சுந்தர் சி க்கு அதிர்ச்சி தந்த 'மிர்ச்சி' சிவா.!

Update: 2020-04-15 11:11 GMT

பண்பலை வானொலியில் பிரபலமடைந்து, சென்னை 28 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் 'மிர்ச்சி' சிவா. இவரது டைமிங் காமெடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததையடுத்து தமிழ் திரையுலகில் நல்ல வளர்ச்சியடைந்தார்.

சுந்தர் சி கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிய போது முதல் பாகத்தில் நடித்த சிவா மட்டுமே இரண்டாம் பாகத்திலிருந்தார். அந்த அளவுக்குச் சுந்தர் சியின் குட்புக்சில் இடம்பெற்றிருப்பவர் சிவா. இந்நிலையில் டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிப்பில் கலகலப்பு இரண்டாம் பாகத்தில் நடித்த ஜீவா, ஜெய் ஆகியோரை வைத்துக் கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தையும் உருவாக்கத் திட்டமிட்டு வருகிறார் சுந்தர் சி. இதிலும் சிவாவை நடிக்க வைக்கும் பொருட்டு சுந்தர் சி தரப்பிலிருந்து சிவாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. சுந்தர் சி தரப்பில் சிவாவுக்கு 50 லட்சம் ரூபாய் சம்பளமாகத் தருவதாகக் கூறினார்களாம், அவரோ 2 கோடி ரூபாய் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தர் சி, அந்த படத்தில் மட்டுமல்லாமல் இனி எந்த படத்திலும் சிவாவை நடிக்க அணுக வேண்டாம் எனத் தனது குழுவிடம் கூறிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

Similar News