நீண்ட தூரம் பாய்ந்து சென்று எதிரி விமானங்களை அழிக்கும் ஏவுகணைகள்! ரஷ்யாவிடமிருந்து வாங்க ஒப்பந்தம்!!

நீண்ட தூரம் பாய்ந்து சென்று எதிரி விமானங்களை அழிக்கும் ஏவுகணைகள்! ரஷ்யாவிடமிருந்து வாங்க ஒப்பந்தம்!!

Update: 2019-07-30 06:43 GMT


விமானங்களைத் தாக்கி அழிக்கும் ஆர் 27 வகை ஏவுகணைகளை, 1500 கோடி ரூபாய் மதிப்பில் ரஷ்யாவிடமிருந்து வாங்க இந்தியா கையெழுத்திட்டுள்ளது.


இந்த வகை ஏவுகணைகளை எஸ்யு-30 மற்றும் சுகோய் ரக விமானங்களில் இருந்து ஏவ முடியும். நீண்ட தூரத்தில் செல்லும் எதிரி விமானங்களையும் இந்த ஏவுகணை மூலம் தாக்கி அழிக்க முடியும். 





இந்திய விமானப்படையின் தரத்தை மேலும் உயர்த்த ஏவுகணைகள் வாங்கப்படுகிறது.


கடந்த 50 நாட்களில் இந்திய விமானப்படைக்காக 7 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கும் மேல் போர் உபகரணங்கள் வாங்குவதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Similar News