மகாராஷ்ட்ராவில் 3 கட்சி கூட்டணி அமைவதில் பின்னடைவு? மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேயிடம் அமித்ஷா அளித்த உறுதிமொழியால் பரபரப்பு !
மகாராஷ்ட்ராவில் 3 கட்சி கூட்டணி அமைவதில் பின்னடைவு? மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேயிடம் அமித்ஷா அளித்த உறுதிமொழியால் பரபரப்பு !
மஹாராஷ்ட்ராவில் சென்ற மாதம் நடைபெற்ற மாநில சட்டசபை தேர்தலில் பாஜக –
சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பாஜக தனிப்பெரும் கட்சியாக அதிக தொகுதிகளை
கைப்பற்றியது.
இந்த நிலையில் ‘புத்திர பாசத்தில்’ மதி இழந்த குடும்ப அரசியல் கட்சியான
சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே தனது மகனை முதல்வராக்கும் மறைமுக திட்டத்துடன்
முதல்வர் பதவியை தங்களுக்கு வழங்கினால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி ஆட்சி என்று
நிபந்தனை விதித்தது. ஆனால் பாஜக இதனை ஏற்கவில்லை. தேர்தலுக்கு முன்பு இத்தகைய
உறுதி எதையும் பாஜக வழங்கவில்லை என்றும் பட்நாவிஸ்தான் முதல்வர் எனக் கூறி
பிரச்சாரம் செய்து வெற்றி அடைந்ததாகவும் பாஜக தலைவர் அமித்ஷா திட்டவட்டமாக கூறினார்.
இதை அடுத்து சிவசேனா பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டு முதல்வர் பதவி
தங்களுக்கே என்ற நிபந்தனையுடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து
கூட்டணி ஆட்சி அமைக்க சென்ற வாரம் பேச்சு வார்த்தை நடத்தியது. அமைச்சரவையில் மேற்கண்ட
இரு கட்சிகளுக்கும் அதிக இடங்களை வழங்கும் திட்டத்தை தயாரித்து அவர்களின் ஒப்புதலை
பெற்றது.
ஆனால் இறுதி முதல்வர் தொடர்பான முடிவை சோனியாகாந்திதான் எடுப்பார்
என்றும் இது தொடர்பாக டெல்லி சென்று அவரை நேரில் சந்திக்க சரத்பவார் மற்றும் சிவசேனா
தலைவர்கள் சந்திப்பார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் இரண்டு முறை அவர்கள் டெல்லி
செல்ல திட்டமிட்டும் சோனியாவிடம் இருந்து எந்த சிக்னலும் கிடைக்காததால் நேற்றைய
அவர்களின் பயண திட்டமும் தோல்வியை தழுவியது.
ஏராளமான ஊழல் வழக்குகளில் சிக்கித் தவிக்கும் காங்கிரஸ் தலைவர் குடும்பம்,
மற்றும் காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் மீது நீதிமன்றங்கள் எந்த கரிசனத்தையும்
இதுவரை காட்டவில்லை. சென்ற வெள்ளிக் கிழமை நடைபெற்ற நேஷனல் ஹெரால்டு பத்திரிகை சொத்துக்கள்
தொடர்பான விசாரணையில் கூட ராகுல் காந்தி முன்னுக்குப் பின் உளருவதாகவும், உண்மைகளை
மூடி மறைக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது சோனியாவுக்கும், ராகுலுக்கும்
அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.