மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயித்துக்கு 32 ஆண்டு சிறை!

Update: 2022-04-09 06:15 GMT

சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயித்துக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பயங்கரவாத அமைப்பான ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவராக இருப்பவர் ஹபீஸ் சயித். இவர் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர். இதனிடையே இவருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இவர் மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி இ தொய்பா பயங்கரவாத அமைப்பை தோற்றுவித்தவரும் இவர் ஆவார்.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: The Express Tribune

Tags:    

Similar News