டெல்லியில் பெண் மருத்துவர்களை தாக்கிய மர்ம நபர் கைது.!

டெல்லியில் பெண் மருத்துவர்களை தாக்கிய மர்ம நபர் கைது.!

Update: 2020-04-09 14:02 GMT

டெல்லியில் பணிபுரியும் இரண்டு பெண் மருத்துவர்களை தாக்கிய மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

டெல்லி ரிங் ரோட்டில் சப்தார்ஜங் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் வேலை பார்க்கும் இரண்டு மருத்துவர்கள் நேற்று இப்பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்கச் சென்றனர். நீங்கள் வந்தால் கொரோனா வைரஸ் பரவி விடும் என கைது செய்யப்பட்ட நபர் மருத்துவர்களிடம் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் டெல்லி முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதன் பிறகு காவல்துறையினர் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.


அவரை கைது செய்து விட்டதாக துணை கமிஷனர் அதுல்தாக்கூர் தெரிவித்துள்ளார்.

Source:  https://www.dinamalar.com/news_detail.asp?id=2518088

Similar News