நிறைவேறிய மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா... பிரதமருக்கு குவியும் மகளிரின் வாழ்த்துக்கள்...

Update: 2023-09-24 01:15 GMT

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேறிய பின்னர் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்தனர். வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா (நாரி சக்தி வந்தன்) நேற்று முன்தினம் இரவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது குறித்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குறிப்பாக இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.


இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, "நாரி சக்தி வந்தன் அதினியம் நிறைவேறியதில் பெருமகிழ்ச்சி அடைந்த நமது துடிப்பான பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. மாற்றத்தின் தீபங்களை ஏந்தியவர்கள் ஒன்றிணைந்து தாங்கள் முன்னெடுத்த சட்டத்தை கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது.


நாரி சக்தி வந்தன் மசோதா நிறைவேற்றப் பட்டதன் மூலம், இந்தியா ஒரு பிரகாசமான, அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்தின் விளிம்பில் நிற்கிறது, இந்த மாற்றத்தின் மையமாக நமது மகளிர் சக்தி உள்ளது" என்று குறிப்பிட்டு தன்னுடைய கருத்தை சுமக வலைத்தளங்களில் பிரதமர் பகிர்ந்து இருக்கிறார் அது மட்டும் கிடையாது பல்வேறு பெண்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பது போன்ற புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News