திமுக அரசில் அடுக்கடுக்காய் கட்டண உயர்வு : மின் கட்டணத்தைத் தொடர்ந்து மின்சார சேவை கட்டணமும் உயர்வு!

மின்சாரக் கட்டணத்தைத் தொடர்ந்து மின்சார சேவை கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மும்முனை இணைப்புக்கான டெபாசிட் ரூபாய் 2145 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று மின்வாரிய அதிகாரிகள் கூறினர்.

Update: 2024-07-19 06:13 GMT

தமிழ்நாட்டில் வீட்டு உபயோகம், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுத்தலங்கள், சிறு குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது . அதன்படி அனைத்து வகை மின்சார பயன்பாட்டிற்கும் 4.83 சதவீதம் அதிகரிக்கிறது .இந்த மின் கட்டண உயர்வு ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

மின் கட்டணத்தைத் தொடர்ந்து மின்சார சேவை கட்டணங்களும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி வீடுகளுக்கு ஒரு முனை மின்சார இணைப்பு வழங்க ரூ.1020 கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது இந்த கட்டணம் ரூ.1070 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் மும்முனை மின்சார இணைப்புக்கான கட்டணம் ரூ.1535 இலிருந்து ரூ.1610 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு முனை இணைப்புக்கு மீட்டருக்கான முன்பணம் ரூ.765 லிருந்து ரூ.800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மும்முனை இணைப்புக்கு மீட்டருக்கான டெபாசிட் கட்டணம் ரூ.2045 லிருந்து ரூ.2145 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் மீட்டரை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடமாற்றம் செய்ய ஒருமுனை இணைப்புக்கு ரூபாய் 1020 லிருந்து ரூ.1070 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் மும்முனை இணைப்புக்கு ரூ.1535 இல் இருந்து ரூ.1610 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மின்சார இணைப்புக்கான பெயர் மாற்றத்துக்கு ரூ.615 இல் இருந்து ரூ.645 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.


SOURCE :Newspaper 

Tags:    

Similar News