ரயில்வே ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!

ரயில்வே ஊழியர்களுக்கு மத்திய அரசு போனஸ் அறிவித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Update: 2024-10-05 17:00 GMT

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக மத்திய அரசு அறிவித்துள்ளது .இதன் மூலம் 11.71 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள் .தீபாவளி பண்டிகையை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 31-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை அடுத்த ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 11.71 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ் தொகையாக வழங்கப்பட உள்ளதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்குவதன் மூலம் மத்திய அரசுக்கு கூடுதலாக 2,029 கோடி செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பாதை பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்டுகள் ,ரயில் மேலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், பாயிண்ட் மேன், மினிஸ்டரியல் ஊழியர்கள் மற்றும் பிற குரூப் எக்ஸ் சி ஊழியர்கள் போன்ற பல்வேறு வகையான ரயில்வே ஊழியர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும் என்று அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர்களின் சிறப்பான செயல் திறனை பாராட்டி மத்திய அமைச்சரவை இந்த தொகையை வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News