ஜம்மு காஷ்மீரில் நடந்த தாக்குதல்:விரைந்த பிரதமர் மோடி! தீவிரப் படுத்தப்பட்ட தேடுதல் வேட்டை!
பிரதம நரேந்திர மோடி சவுதி அரேபியாவிற்கு அரசு முறை பயணமாக இரண்டு நாள் சென்றிருந்தார் ஆனால் நேற்று ஏப்ரல்22 இல் காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர்
இதனால் பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி அரேபியா பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு இன்று அதிகாலை நாடு திரும்பினார் திரும்பிய சில மணி நேரங்களிலே டெல்லி விமான நிலையத்திலேயே காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்
மேலும் பைஸ்ரான் பஹல்காம் மற்றும் அனந்த்நாக் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் பயங்கரவாதிகளை சட்டத்தின் முன்னிறுத்தி தண்டிக்க நடவடிக்கைகளும் தீவிர படுத்தப்பட்டுள்ளது இறந்தவர்களின் உடல்களை மீட்ட மருத்துவக் குழுக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது
முன்னதாக சம்பவம் நடந்த அடுத்த சில மணி நேரங்களிலே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஸ்ரீநகர் புறப்பட்டார்