ஹைதராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்து: ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த பிரதமர் மோடி!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ₹ 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ₹ 50,000-மும் கருணைத் தொகையை பிரதமர் அறிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: "தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கும் இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.
மரணமடைந்த ஒவ்வொருவரின் வாரிசுதாரர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ₹2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.