இந்திய மக்கள் ஜனநாயகம் மற்றும் பொருளாதாரம் இரண்டிலும் மகிழ்ச்சியாக இருப்பதாக பியு ஆய்வில் முடிவு!
தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் பெரும்பாலான முன்னேறிய பொருளாதாரங்கள் ஜனநாயக ஆட்சியின் மீது அதிகரித்து வரும் பொதுமக்களின் அதிருப்தியுடன் போராடி வரும் நேரத்தில்,இந்தியா நிலைத்தன்மை மற்றும் திருப்தியின் ஒரு கலங்கரை விளக்கமாக உயர்ந்து நிற்கிறது பியூ ஆராய்ச்சியின் படி உலகளாவிய ஜனநாயக திருப்தியில் நமது நாடு மிக உயர்ந்த இடத்தில் உள்ளது.நமது நாட்டில் உள்ள மக்கள் ஜனநாயகம் மற்றும் பொருளாதாரம் இரண்டிலும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இந்த ஆராய்ச்சி குறிப்பிட்டுள்ளது
நமது மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு அனைத்துப் பாராட்டுகளும் அவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ் பாரதம் அதன் ஜனநாயக வேர்களை ஆழப்படுத்தியது மட்டுமல்லாமல் நாட்டின் எதிர்காலத்தில் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்