நாடாளுமன்ற தேர்தலில் அமல்படுத்தப்படும் 12 புதிய நடைமுறைகள் : சாட்டையை சுழற்றும் தேர்தல் ஆணையம்.!
நாடாளுமன்ற தேர்தலில் அமல்படுத்தப்படும் 12 புதிய நடைமுறைகள் : சாட்டையை சுழற்றும் தேர்தல் ஆணையம்.!
இதுவரை நடந்து முடிந்த 16 மக்களவை தேர்தல்களை விட, வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 19-ஆம் தேதி வரை பல கட்டங்களாக நடைபெற உள்ள 17 வது மக்களவை தேர்தலை வெளிப்படையாக நடத்த தேர்தல் ஆணையம் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
1) வாக்களிக்கும் எந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னத்துடன், புகைப்படத்தையும் முதல் முறையாக இடம் பெற நடவடிக்கை
2) அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்களிக்கும் ஒவ்வொரு வாக்காளருக்கும், ஒப்புகை சீட்டு வழங்க முதல் முறையாக நடவடிக்கை
3) வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்லும் அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்த முதல் முறையாக உத்தரவிடப்பட்டுள்ளதால், இதன் மூலம் வாகனங்கள் எங்கு செல்கின்றன என்பதை கண்காணிக்க முடியும்
4) குற்றவழக்குகளில் தொடர்புடைய வேட்பாளர்கள், அவரவர் போட்டியிடும் தொகுதியில் இருந்து வெளியாகும் மூன்று நாளிதழ்கள், மூன்று தொலைக்காட்சிகளில் தங்களது குற்ற வழக்குகள் குறித்த முழுத் தகவலையும் வெளியிட வேண்டும்
5) வேட்பாளர்கள் கடந்த 5 ஆண்டு கால வருமானம், வரித்தாக்கல் ஆகியவற்றை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும், வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள் குறித்தும் அறிவிக்க வேண்டும் என்றும் முதல் முறையாக தேர்தல் ஆணையம் உத்தரவு
6) நாடு முழுவதும் உள்ள 5000 வாக்குச் சாவடிகள், அனைத்து வாக்கு எண்ணும் மையங்களில் வெப் கேமிரா பொருத்தவும், அதன் மூலம் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை மக்கள் நேரலையில் காணவும் முதல் முறையாக ஏற்பாடு