இன்று பா.ஜ.க நிர்வாகிகளுடன் தீபாவளியை கொண்டாட திட்டமிட்டுள்ளார்- மோடி!!

இன்று பா.ஜ.க நிர்வாகிகளுடன் தீபாவளியை கொண்டாட திட்டமிட்டுள்ளார்- மோடி!!

Update: 2019-10-24 05:32 GMT

உத்தர பிரதேசத்தில், அயோத்தி நகரில், ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை, பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி, தன் தொகுதியான வாரணாசியில், இன்று பா.ஜ., நிர்வாகிகளுடன் தீபாவளியை கொண்டாட திட்டமிட்டுள்ளார். 


கடந்த லோக்சபா தேர்தலில், வாரணாசி தொகுதியில் இருந்து, 4.20 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில், இரண்டாவது முறை, எம்.பி.,யாக தேர்வாகியுள்ள பிரதமரால், தன் அலுவல்கள் காரணமாக, அங்கு அடிக்கடி செல்ல முடியவில்லை.இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு, 'இன்று, என் தொகுதியான வாரணாசியில், பா.ஜ., தொண்டர்கள், நிர்வாகிகளை சந்தித்து, உரையாட திட்டமிட்டுள்ளேன்,என்னிடம் கேட்க, கேள்விகள் அல்லது தகவல்கள் இருப்பின், அவற்றை, 'நமோ ஆப்' மூலமாக தெரியப்படுத்தவும்' என மோடி, 'டுவிட்டரில்' குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு, 'தீப உற்சவம், மோடிஜியுடன் தொண்டர்கள் விருந்து' என, பெயரிடப்பட்டுள்ளது. 


இன்று மாலை, 4:30 மணியளவில், இந்த தீபாவளி விருந்து நிகழ்ச்சிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன,அதே நேரத்தில் இன்று மகாராஷ்டிரா, ஹரியானா போன்ற மாநிலங்களில் சட்டமன்ற இடைத் தேர்தலின் முடிவுகள் என்பது குறிப்பிடத்தக்கது.




https://twitter.com/narendramodi/status/1186469802514120704?s=19


https://m.economictimes.com/news/politics-and-nation/pm-modi-to-interact-with-party-workers-in-varanasi-on-october-24/articleshow/71699024.cms


Similar News