ஊரடங்கு உத்தரவு நீடிப்பது பற்றி அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்...

ஊரடங்கு உத்தரவு நீடிப்பது பற்றி அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்...

Update: 2020-04-08 04:36 GMT

சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி வருகிறது. இதனால் இதுவரை 79ஆயிரத்துக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 13லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் பரவி 4 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது உத்தரவு அமலில் உள்ளது.

இந்த உத்தரவை மேலும் அதிகரிக்க பல அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.இதனை பிரதமர் மோடி அவர்கள் அரசியல் கட்சி தலைவர்களுடன் இன்று காலை ஆலோசனை நடத்துகிறார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் நடவடிக்கை பற்றி இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி அவர்கள் பல அரசியல் கட்சி தலைவர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்துரையாடல். இதில் லோக்சபா, ராஜ்யசபாவில் இருக்கும் 5க்கும் மேற்பட்ட எம்.பி கொண்ட கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பது பற்றியும் மற்றும் ஊரடங்கு உத்தரவை நீடிப்பது பற்றியும் ஆலோசனை நடத்துகிறார் என எதிர்பாக்கப்படுகிறது.

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2517346 

Similar News