அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை!
அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை!
உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மத்திய - மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்தியாவில் தற்போது வரை 1,617 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், 38 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரண்டாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 11 மணிக்கு அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அப்போது, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் இனி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளார்.