திமுகவை உதறித்தள்ளிவிட்டு அதிமுக பக்கம் சென்று சேர்ந்தது ஏன் ?: பா.ம.க. நிறுவனர் டாகடர் ராமதாஸ் மனம் விட்டு விளக்கம்
திமுகவை உதறித்தள்ளிவிட்டு அதிமுக பக்கம் சென்று சேர்ந்தது ஏன் ?: பா.ம.க. நிறுவனர் டாகடர் ராமதாஸ் மனம் விட்டு விளக்கம்
திமுகவை உதறித்தள்ளிவிட்டு அதிமுக பக்கம் சென்று சேர்ந்தது ஏன் ?: பா.ம.க. நிறுவனர் டாகடர் ராமதாஸ் மனம் விட்டு விளக்கம்
மத்திய அமைச்சரவையில் பாமக பங்கு பெற்றபோதேல்லாம் கஷ்டப்பட்டு வலியுறுத்தி பெறப்பட்ட திட்டங்களை திமுகவினர் செயல்படுத்தாமல் முடக்கிவிட்டதாகவும், அதனால் தமிழக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டதாகவும் அதனால்தான் திமுக கூட்டணிக்கு போகாமல் அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்ததாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த இரு வாரங்களில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொள்ளும் என்பது தான் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று 2011-ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அவற்றில் ஒன்றுடன் கூட்டணி அமைப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்? அதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்? ஆகிய வினாக்கள் எழுந்தன. என்றாலும் தமிழக நலன் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நம் குரல் ஒலிக்கவில்லையே என்பதால் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என பொது குழுவில் முடிவு செய்யப்பட்டது.