சாணி காளான் மக்கி போகும்.. எம்.பி.செந்தில்குமாரை வறுத்தெடுக்கும் பா.ம.க. துணை தலைவர்.!

சாணி காளான் மக்கி போகும்.. எம்.பி.செந்தில்குமாரை வறுத்தெடுக்கும் பா.ம.க. துணை தலைவர்.!

Update: 2020-04-04 09:14 GMT

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குறித்து தர்மபுரி எம்.பி., செந்தில்குமார் தவறான ட்விட் செய்துள்ளார்.

இதற்கு பா.ம.க. தொண்டர்கள் மட்டுமின்றி அதன் கட்சியின் நிர்வாகிகள் பலர் செந்தில்குமார் எம்.பி.க்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பா.ம.க. மாநில துணை தலைவர் சாந்தமூர்த்தி தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

மழை காலங்களில் சில இடங்களில் காளான்கள் முளைக்கும் அது 2 விதமாக இருக்கும். ஒன்று நல்ல காளான் மற்றொன்று சாணி காளான்.

சாணி காளான் என்பது எதற்கும் பயன்படாது மக்கி வீணாக போய்விடும். அந்த மாதிரிதான் இந்த தர்மபுரி எம்.பி., இவரை பற்றி நாம் பேசுவதே வேஸ்ட் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குறித்து அவதூறு பரப்பும் விதமாக பேசி வந்தால் எந்த ஊரிலும் கால் வைக்க விடமாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார். 

Similar News