தாயாரிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றார்!!

தாயாரிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றார்!!

Update: 2019-09-17 10:50 GMT


பிரதமர் நரேந்திர் மோடி இன்று 69 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், விளையாட்டு, சினிமா துறை பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பல் தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


பிறந்தநாளையொட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வரும் தனது தாயார் ஹீரா பென்னை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து ஆசி பெற்றார். ஒவ்வொரு பிறந்தநாளிலும் தனது தாயை சந்தித்து ஆசி பெறுவதை பிரதமர் நரேந்திர மோடி, வழக்கமாக கொண்டுள்ளார்.





அதேபோன்று இன்றும் அவர் தனது தாயார் ஹீரா பென்னிடம் அவரிடம் ஆசி பெற்றார். பின்னர் தாயுடன் சேர்ந்து மதிய உணவும் சாப்பிட்டார். சிறிது நேரம் அவரிடம் பேசிக் கொண்டு இருந்தார். அதன் பிறகு பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.


Similar News