தான் வசிக்கும் அரசு பங்களாவின் வாடகை பாக்கியை ஒரு வழியாகக் கட்டிய பிரியங்கா காந்தி!
தான் வசிக்கும் அரசு பங்களாவின் வாடகை பாக்கியை ஒரு வழியாகக் கட்டிய பிரியங்கா காந்தி!
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா, லுடியன்ஸ் டெல்லியில் தான் வசித்து வந்த அரசாங்க பங்களாவை காலி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட ஒரு நாள் கழித்து, அதன் வாடகை பாக்கியை ஒரு வழியாகக் கட்டி விட்டார்.
கடந்த 23 ஆண்டுகளாக அவர் ஆக்கிரமித்திருந்த 35, லோதி எஸ்டேட் பங்களாவிற்கான வாடகை பாக்கியை ஆன்லைனில் பிரியங்கா காந்தி செலுத்தியுள்ளதாக வீடமைப்பு மற்றும் நகர்ப்புற அமைச்சகம் புதன்கிழமை உறுதிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
"திருமதி பிரியங்கா காந்தி வாத்ரா தான் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை ஆன்லைனில் செலுத்தியுள்ளார். எனவே, 30.06.2020-ல் இருந்த நிலுவைத் தொகை இப்போது இல்லை" என்று அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி பிரியங்காவிற்கு ₹3,46,677 நிலுவைத் தொகை இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமதி வாத்ரா தனது அரசு இல்லத்திற்கு கிட்டத்தட்ட ஒரு வருடமாக வாடகை செலுத்தவில்லை.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா, கடந்த ஆண்டு நவம்பரில் SPG கவர் அகற்றப்பட்ட போதிலும், அரசு பங்களாவை காலி செய்யாமல் இருந்தார்.
பிரியங்கா காந்தி வாத்ராவுக்கு இந்திய அரசு வழங்கிய தனது பங்களாவை காலி செய்ய புதன் கிழமை நோட்டீஸ் வழங்கப்பட்டது. அவர் SPG பாதுகாப்பில் இருந்ததால் அவருக்கு பங்களா ஒதுக்கப்பட்டது. கடந்த 23 ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ள பங்களாவை காலி செய்ய ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.