புதுச்சேரி: அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடக்க விஷேஷ திருமஞ்சன பூஜைகள்!

புதுச்சேரி: அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடக்க விஷேஷ திருமஞ்சன பூஜைகள்!

Update: 2020-08-05 12:49 GMT

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையை பாரத பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.


இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை சிறப்புற நடைபெற வேண்டியும், விரைவில் கோவில் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டியும் புதுச்சேரி அருகே உள்ள ஸ்ரீ பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஸ்ரீ பட்டாபிஷேக ராமச்சந்திரமூர்த்திக்கு விஷேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. முன்னதாக பால், மஞ்சள், சந்தனம் இளநீர் மற்றும் கான்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட நறுமணமிக்க பன்னீர் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்தனர்.


தொடர்ந்து மூலவர் பட்டாபிஷேக ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி பூஜைகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Similar News