பயப்படுறியா குமாரு ? நேர்காணலுக்கு பயந்து ஓடும் ராகுல் காந்தி !

பயப்படுறியா குமாரு ? நேர்காணலுக்கு பயந்து ஓடும் ராகுல் காந்தி !

Update: 2019-05-04 01:35 GMT

2014 ஆம் ஆண்டு அர்னாப் கோஸ்வாமியுடன் நடந்த நேர்காணலின் போது, அர்னாப் கேட்ட எந்த ஒரு கேள்விக்கும் சரியான பதில் அளிக்காமல், கூறியதையே மீண்டும் மீண்டும் கூறியது நகைப்புக்குள்ளாக்கியது. இதை தொடர்ந்து, செய்தி நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் பேட்டியை தவிர்த்து வந்தார். அர்னாப் பல முறை அழைப்பு விடுத்தும் ராகுல் தரப்பில் எந்த பதிலும் இல்லை.





இந்தியா டுடே நிறுவனத்திற்கு ராகுல் பேட்டி அளித்ததாகவும், அதை கண்டுகளியுங்கள் என்று நிறுவனத்தின் சார்பில் ட்வீட் செய்யப்பட்டது. அதில் காணொளிக்கு பதில் எழுத்து வடிவத்தில் கேள்வி பதில்கள் கொடுக்கப்பட்டது. ஏன் காணொளி பேட்டி ராகுல் காந்தி கொடுக்கவில்லை, பயந்து ஓடுகிறாரா என்று பலர் கேள்வி எழுப்பினர் மக்கள்





இதற்கு பதில் அளித்த இந்தியா டுடே, தங்களிடம் பேட்டியின் காணொளி இல்லை என்றும், காங்கிரஸ் கட்சியினர் அதை பதிவு செய்ததாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. ராகுல் கடந்த ஐந்து வருடங்களில் எந்த பேட்டியும் கொடுக்கவில்லை. பயபடுறியா குமாரு ?? என்று சமூக ஊடகத்தில் நகைக்கின்றனர்


Similar News