பாகிஸ்தான் தீவிரவாதத்தை வேரறுத்தால் அந்த நாட்டுக்கு இந்தியா சகல விதங்களிலும் உதவி புரியும்.. உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்.!

பாகிஸ்தான் தீவிரவாதத்தை வேரறுத்தால் அந்த நாட்டுக்கு இந்தியா சகல விதங்களிலும் உதவி புரியும்.. உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்.!

Update: 2019-03-03 10:49 GMT

பாகிஸ்தான், தனது மண்ணில் இருந்து தீவிரவாதத்தை முற்றாக வேரறுக்க முன்வருமானால், அந்நாட்டிற்கு ஆதரவளிக்க தயார் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்திருக்கிறார்.


தேசிய புலனாய்வு முகமைக்காக டெல்லி மற்றும் கவுகாத்தியில் கட்டப்பட்டுள்ள 2 புதிய வளாகங்களைத் திறந்துவைத்த அவர், புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, தீவிரவாதத்திற்கு எதிராக திட்டவட்டமான போரை முன்னெடுப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக கூறியிருக்கிறார்.


தீவிரவாதத்தை ஒழித்துக்கட்ட போதிய பலம் இல்லை என பாகிஸ்தான் கருதுமானால், இந்தியா நேரடியாகவே இணைந்து செயலாற்றி, தீவிரவாத த்தை முற்றாக அழிக்கத் தயார். பாகிஸ்தான் இதற்கு தயார் என்றால் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு பல விதங்களிலும் இந்தியா ஆதரவு அளிக்கும் என்று ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார்.


Similar News