ஒரே நாடு,ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஜூன் மாதம் முதல் அமல் - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்!

ஒரே நாடு,ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஜூன் மாதம் முதல் அமல் - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்!

Update: 2019-12-04 02:51 GMT

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஜூன் மாதம் முதல் அமுலாகும் என்று மத்திய உணவு பொது வினியோகம் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார் இதுகுறித்து மக்களவையில் பேசிய அவர் தங்கள் வேலை மற்றும் இதர காரணங்களுக்காக நாடு முழுவதும் அடிக்கடி இடம் பெறும் தொழிலாளர்களுக்கு இது பயனளிக்கும் என தெரிவித்தார் குறிப்பாக தினக்கூலி, கட்டுமானம் பணி, காரணமாக சொந்த மாநிலத்தை விட்டு வேலைக்காக மற்ற மாநிலங்களுக்கு சென்று பணிபுரிவோருக்கு தினக்கூலிக்கு இது மிகவும் பயனளிக்கும் என தெரிவித்தார்.


அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் அல்லது ஆதார் மூலம் அடையாளம் கண்டறிந்து பயனாளிகளுக்கு பொருட்கள் வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு ரேஷன் கடைகளும் ஆன்லைன் மூலம் இணைக்கப்படும். இத்திட்டத்தை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு தேவையான செயல்திட்டத்தை உருவாக்க மற்றும் சர்வதேச தரத்துக்குத் தேவையான வழிகளையும் ஆய்வு செய்ய இந்தியத் தர நிர்ணய நிறுவனத்திடம் கேட்டுள்ளோம்,என்று ராம்விலாஸ் பஸ்வான் பேசினார்


Similar News