30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் திட்டத்தை எதிர்க்கும் தமிழர்கள் - தூத்துக்குடியில் வதந்தியை கிளப்பி விடும் மிஷினரிகள் : மீண்டும் அதிர்ச்சி தகவல்.!
30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் திட்டத்தை எதிர்க்கும் தமிழர்கள் - தூத்துக்குடியில் வதந்தியை கிளப்பி விடும் மிஷினரிகள் : மீண்டும் அதிர்ச்சி தகவல்.!
இஸ்ரோவின் ராக்கெட்களை ஏவுவதற்கு 3-வது புதிய ஏவுதளம் அமைப்பது குறித்த சாத்தியங்களை ஆராய வல்லுநர் குழு நியமிக்கப்பட் டுள்ளது. அத்துடன் இஸ்ரோவின் லட்சியமாக கருதப்படும் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தையும் புதிய ஏவுதளத்தில் இருந்து செயல்படுத்துவது குறித்த ஆய்வுகளையும் மேற்கண்ட வல்லுநர் குழு மேற்கொள்ளும். இதனால், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் நாட்டின் 3-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நாட்டின் அனைத்து செயற்கைக் கோள்களும் தற்போது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருக்கும் இரு ராக்கெட் ஏவுதளங்களில் இருந்தே விண் ணில் செலுத்தப்படுகின்றன. 3-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் நீண்டகால கோரிக்கை. இதற்காக பொருத்தமான இடத்தை தேர்வு செய்ய சில ஆண்டுகளுக்கு முன்பே இஸ்ரோவின் விண்வெளித் துறை பேராசிரியர் நாராயணா தலைமையில் விஞ்ஞானிகள் அண்ணாமலை, அபேகுமார், கனங்கோ, சுதிர்குமார், சேஷகிரி ராவ், சோமநாத் ஆகிய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்கள் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட கிழக்கு கடற்கரைப் பகுதிகளை ஆய்வு செய்ததில் புவியியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியாக நாட்டி லேயே மிகச் சிறந்த இடம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் என்பது தெரிய வந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் குலசேகரப் பட்டினத்தில் 3-வது ஏவுதளம் அமைப்பது தள்ளிப்போனது. இந்த சூழலில்தான், இஸ்ரோ தலைவராக சிவன் பொறுப்பேற்றதும் இதுகுறித்த ஆலோசனைகள் தீவிரம் அடைந்தன.
வல்லுனர்கள் கூறும் காரணம்:
3-வது ஏவுதளம் எங்கு அமைய வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த பாகுபாடும் கிடையாது. ஆனால், புவியியல், பொருளாதாரம் மற்றும் தேசத்தின் பாதுகாப்பு ரீதியாக அதற்கேற்ற சிறந்த இடம் குலசேகரப் பட்டினம்தான். ஏனென்றால், உலகிலேயே ராக்கெட் ஏவுவதற்கு மிக உகந்த இடம் பூமத்திய ரேகைக்கு 5 டிகிரியில் நெருக்கமான கோணத்தில் இருக்கும் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானா. அடுத்தபடியாக, ஸ்ரீஹரி கோட்டா ஏவுதளம் பூமத்திய ரேகைக்கு 13.43 டிகிரியில் இருக் கிறது. ஆனால், குலசேகரப்பட்டி னமோ 8 டிகிரியில் இருக்கிறது.