நள்ளிரவில் உறை பனியிலிருந்து ஸ்ரீநகர் விமான நிலையத்தை மீட்டுத் தந்த ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் !! மெய் சிலிர்த்த இராணுவ அதிகாரிகள் !!
நள்ளிரவில் உறை பனியிலிருந்து ஸ்ரீநகர் விமான நிலையத்தை மீட்டுத் தந்த ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் !! மெய் சிலிர்த்த இராணுவ அதிகாரிகள் !!
அது 1965 ஆம் வருடம். இந்தியா பாகிஸ்தான் போர் உச்ச கட்டத்தை எட்டியிருந்த நேரம்.. காஷ்மீருக்காக நடந்த போரில் பாக், வெகுவாக முன்னேறிக் கொண்டிருக்க, காஷ்மீருக்கு இந்திய ராணுவ உதவி அவசரமாக தேவைப்பட்டது...
தலைநகர் டெல்லி ராணுவ தலைமையகத்தில் இருந்து, ஶ்ரீநகர் ஒரு அவசர செய்தியை பெற்றது." போரில் ஶ்ரீநகர் வீழ்ந்தாலும் கவலைப் பட வேண்டாம். ஆனால் எக் காரணம் கொண்டும், ஶ்ரீநகர் விமான நிலையம் மாத்திரம் எதிரிகள் வசப்பட்டு விடக் கூடாது.. நாங்கள் இங்கிருந்து ராணுவ துருப்புக்களை விமானங்களில் அனுப்பி வைக்கிறோம்" என்று...!
ஆனால் ஶ்ரீநகர்,"இங்கு எங்கு பார்த்தாலும் கடுமையான பனிப் பொழிவு.. விமான நிலையத்தில் உதிரம் உறைந்து போகுமளவு கடுமையான பனிமழை பொழிவு..! இதன் ஓடுதளத்தில் விமானங்கள் தரையிறங்குவது என்பது இயலாத காரியம் மட்டுமல்ல.. கடினமானது" என்று பதில் அனுப்பியது..
உடனே டெல்லி,"தற்காலிக பணியாளர்கள் எவ்வளவு வேண்டுமானாலும், எவ்வளவு ஊதியத்தில் வேண்டுமானாலும் நியமித்துக் கொள்ளுங்கள்.. விமான நிலையம் மட்டும் முக்கியம்.. தகுந்த நடவடிக்கை உடனே எடுக்கவும்" என பதில் உத்தரவிட்டது..
"இங்கே வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை... உடனடியாக கிடைக்காது" என ஶ்ரீநகரில் இருந்து பதில் வந்தது.
அப்போது தான் ராணுவ தலைமையகத்தின் கவனத்திற்கு, *"சங்பரிவார்"* இயக்கம் நினைவிற்கு வந்தது.
அப்போது நள்ளிரவு 11.00 மணி. தொலைபேசிகள் சுழன்றன.ஒரு ராணுவ ஜீப், ஶ்ரீநகரின் சங்பரிவார் அலுவலக வாசலில் வந்து நின்றது.. அதிலிருந்து இறங்கிய உயர் அதிகாரிகள் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தினுள் நுழைந்தனர்.