பிரதமர் மோடிக்கு ஆதரவளித்த டாக்டர் ராமதாஸ்.. ட்விட் செய்து வம்பில் மாட்டிக்கொண்ட செந்தில்குமார்.!
பிரதமர் மோடிக்கு ஆதரவளித்த டாக்டர் ராமதாஸ்.. ட்விட் செய்து வம்பில் மாட்டிக்கொண்ட செந்தில்குமார்.!
பிரதமர் நரேந்திரமோடி 5ம் தேதி இரவு 9 மணியளவில் வீட்டில் 9 நிமிஷம் விளக்கு, அல்லது செல்போன் டார்ச் ஒளிர செய்யுங்கள் என்று கூறியிருந்தார்.
கொரோனாவால் இறப்பு விகிதம் உலகம் முழுவதும் 50 ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
ஆனால் இந்தியாவில் 130 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கை பிறப்பித்தார்.
இதனால் கொரோனா வைரஸ் தொற்று பரவுவது முற்றிலும் தடை பட்டுள்ளது. இதற்கு உலக சுகாதார அமைப்பு இந்தியாவை பாராட்டியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.
இவர்களை கவுரவிக்கும் வகையில் ஞாயிறு 5ம் தேதி இரவு 9மணிக்கு 9 நிமிஷம் வீட்டில் டார்ச் லைட், அல்லது அகல்விளக்கு ஏற்றுங்கள் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆதரவு தெரிவித்தார். தமிழக மக்கள் அனைவரும் வீட்டில் டார்ச் லைட்டுக்கு பதிலாக அகல் விளக்கு ஏற்றுங்கள் என்று கூறியிருந்தார்.
இதனை கேளி செய்யும் விதமாக தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் ட்விட் செய்துள்ளார்.
அதில் நாங்க பணம் வாங்குனப்போ நீங்க விளக்கு பிடிச்சிங்களா''னு எங்கள பார்த்து கேள்வி கேட்ட ராமதாஸ்..
இல்லை நாங்க எந்த விளக்கும் பிடிக்கல.
பார்த்து யாரோ சொன்னாங்கனு நீங்களும் ஐயா ராமதாஸ் விளக்கு புடிச்சு அத போட்டோ போட்டு விட போறிங்க.
பின் விளைவுக்கு நாங்கள் பொறுப்பல்ல. இவ்வாறு அவர் மிகவும் தரம் தாழ்ந்து ட்விட் செய்துள்ளார்.