சபாநாயகர் ஓவராக சீன் போட முடியாது ..கர்நாடகாவில் அடுத்த சில நாட்களில் நடக்கப் போவது இதுதான் !! அரசியலாளர்கள் திட்டவட்ட கணிப்பு !!
சபாநாயகர் ஓவராக சீன் போட முடியாது ..கர்நாடகாவில் அடுத்த சில நாட்களில் நடக்கப் போவது இதுதான் !! அரசியலாளர்கள் திட்டவட்ட கணிப்பு !!
கர்நாடகாவில் இது வரை மொத்தமாக 16 எம்எல்ஏக்கள் தங்களின் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துள்ளார்கள். இவர்களில் 13பேர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 பேர் மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்தவர்கள்.இது போக 2 சுயே ச்சை எம்எல்ஏக்கள் குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளார்கள்.
இதனால் குமாரசாமி அரசுக்கு காங்கிரஸ் கட்சியின் 66 எம்எல்ஏக்கள் மதசார்பற்ற ஜனதா தளத்தின் 34 எம்எல்ஏக்கள் என்று 100எம்எல்ஏ க்களின் ஆதரவுதான் இருக்கிறது.ஆனால் பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் 2 சுயேச்சைகள் அடுத்து பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு எம்எல்ஏ என்று 108 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது .
ஆனால் பாஜக ஆட்சி அமைக்க முடியவில்லை. இழுத்துக் கொண்டே செல்கிறது. காரணம் என்னவென்றால் ராஜினாமா செய்த எம்எல்ஏக்களை மறுபடியும் சமாதானம் செய்து ராஜினாமாவை வாபஸ் பெற வைத்து
ஆட்சிக்கு ஆதரவாக கொண்டு வர குமாரசாமி குரூப் முயற்சி செய்து கொண்டே இருக்கிறது.
இந்த முயற்சிக்கு துணையாக குமாரசாமி இன்றும் தொடர்ந்து முதல்வராக இருப்பதால் போலீஸ் துணை புரிந்து வருகிறது. முடிவு என்னாகிறது
என்று விரைவில் தெரிந்து விடும்.ஆட்சியை தக்கவைக்க அவர்கள் போராடும் போராட்டத்தில் பாதியாவது ஆட்சியை கைப்பற்ற பாஜக செய்கிறதா என்றால் இல்லை என்றே கூற வேண்டும்.
.
ராஜினாமா செய்துள்ள 16 எம்எல்ஏக்களை யும் மீடியாக்கள் முன்னிலையில் பிஜேபி தங்கள் கட்சில் இணைத்து இருக்க வேண்டும்.இல்லை யென்றாலும் மும்பையில் ஹோட்டலில் தங்கி காவல் காத்து வந்த இந்த 10 எம்எல்ஏக்களையும் பாஜகவுடன் இணைத்து இருந்தால் அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் தானாகவே அமலுக்கு வந்துவிடும்.
.
இந்த மாதிரி அதிரடியான செயல்களை பாஜக திட்டம் போட்டு செய்யவில்லை, ஏனெனில் இவர்கள் திடீரென்று மறுபடியும் காங்கிரஸ் கட்சிக்கு சென்று விட்டால் என்ன செய்ய முடியும்?
பாஜகவுக்கு இப்பொழுது தேவை காங்கிரஸ் எம் எல்ஏக்களின் எண்ணிக்கை குறைய வேண்டும் அதற்க்காகத்தான் அவர்களை ராஜினாமா செய்து வைத்து வருகிறது பாஜக என கூறப்படுகிறது.
மும்பைக்கு அழைத்து சென்றதற்கு பதிலாக டெல்லிக்கு அழைத்துப்போய் நட்டா முன்னிலையில் அவர்களை பாஜகவில் சேர்த்து இருந்தால் அவர்களின் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாய்வதற்கு வழி ஏற்பட்டு அவர்களின் எம்எல்ஏ பதவி தானாக போய் விடும் அல்லவா. பாஜகவுக்கு அது தானே தேவை.