இலங்கை குண்டு வெடிப்பு சென்னையில் முஸ்லீம் தீவிரவாதிகள் கைது! இந்தியாவில் சதி வேலைகளில் ஈடுபட திட்டம்!
இலங்கை குண்டு வெடிப்பு சென்னையில் முஸ்லீம் தீவிரவாதிகள் கைது! இந்தியாவில் சதி வேலைகளில் ஈடுபட திட்டம்!
தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள், நேற்று சென்னை, நாகையில் அதிரடியில் இறங்கினர் சல்லடை போட்டு சோதனை நடத்தினர். துபாயில் கிடைத்த துப்பு அடிப்படையில், பயங்கரவாத தொடர்புகளை கண்டறிய, ரகசிய வேட்டையில் களமிறங்கினர் தேசிய புலனாய்வு அமைப்பு.
சோதனையில் சிக்கியவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், இந்தியாவில் சதி வேலைகளில் ஈடுபட, சர்வதேச பயங்கரவாத இயக்கம் திட்டமிட்டுள்ள தகவல் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இலங்கையில், ஏப்ரல், 21ல், ஈஸ்டர் தினத்தன்று, தேவாலயங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில், 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக, என்.ஐ.ஏ.,என்ற, இந்திய தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள், இலங்கை சென்று, விசாரணை நடத்தினர்.
அப்போது, குண்டு வெடிப்புக்கு காரணமான நபர்களுடன், தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்தோர், சமூக வலைதளங்கள் வாயிலாக, தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த நபர்களின் தகவல்களை சேகரித்த, என்.ஐ.ஏ., அதிகாரிகள், தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஜூன் மாதத்தில், கோவையில் நடத்தப்பட்ட சோதனையில், இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பண பரிவர்த்தனை மற்றும் மூளை சலவை செய்தவர்கள் பற்றிய தகவல் கிடைத்தது. அந்த கும்பல், தடை செய்யப்பட்ட அமைப்பின் பெயர்களை மாற்றி, புதிய பெயர்களில் செயல்படுவதாகவும் தெரிய வந்தது.
இந்நிலையில், 'வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த்' என்ற அமைப்பு, ஆறு மாதங்களுக்கு முன், துவங்கப்பட்டது. இந்த அமைப்பு, சென்னை, மண்ணடி, லிங்கி செட்டி தெருவில் உள்ள, ரஹமத்துல்லா என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில் செயல்படுகிறது. இந்த அமைப்பின் வாயிலாகவே, பண பரிவர்த்தனை, கோவை வழியாக இலங்கைக்கு சென்றது, என்.ஐ.ஏ., விசாரணையில் தெரிய வந்தது.மேலும், அந்த அமைப்பிற்கும், ஐ.எஸ்., மற்றும் அல்குவைதா பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாகவும், ரகசிய தகவல் கிடைத்தது.