கவர்னருக்கு எதிரான பொய் செய்தி: ஹைகோர்ட் விதித்த தடையை நீக்கி நக்கீரன் கோபாலுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் !!

கவர்னருக்கு எதிரான பொய் செய்தி: ஹைகோர்ட் விதித்த தடையை நீக்கி நக்கீரன் கோபாலுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் !!

Update: 2019-07-12 09:18 GMT


நக்கீரன் கோபாலுக்கு எதிராக கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 


பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக செய்தி வெளியிட்டதாக நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் நக்கீரன்கோபால் மற்றும் நக்கீரன் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக, ஆளுநரை பணிசெய்ய விடாமல் தடுத்தல், குற்றச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது சுதந்திர இந்தியாவில் ஆளுநரை பணிசெய்ய விடாமல் தடுத்த பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இதுதான் எனவும், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள போதுமான முகாந்திரம் உள்ளதா என்பதை ஆராயாமல், கீழமை நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளதாக கூறி, எழும்பூர் நீதிமன்ற வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதித்து , விசாரணையை தள்ளிவைத்தார்.


இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. மேலும்  தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நக்கீரன் கோபால் 4 வாரத்தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Similar News