போதுமான ஏற்பாடுகள் செய்வதை விட்டுவிட்டு, அத்திவரதரை தரிசிக்க வரவேண்டாம் என்று சொல்வதா? - பக்தர்கள் கொந்தளிப்பு!!
போதுமான ஏற்பாடுகள் செய்வதை விட்டுவிட்டு, அத்திவரதரை தரிசிக்க வரவேண்டாம் என்று சொல்வதா? - பக்தர்கள் கொந்தளிப்பு!!
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்துள்ள அத்திவரதரை தினமும் லட்சக்கணக்கானோர் தரிசித்து செல்கின்றனர். இதுவரை 24 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள், அத்திவரதரை தரிசித்துள்ளனர்.
48 நாட்கள் மட்டுமே அத்திவரதரை தரிசிக்க முடியும் என்பதால், நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஜூலை 1 - ஆம் தேதி துவங்கிய அத்திவரதர் விழா ஆகஸ்ட் 17 - ஆம் தேதி வரை நடக்கிறது. அதன் பிறகு மீண்டும் அத்திவரதர் கோயில் திருக்குளத்திற்குள் சென்றுவிடுவார்.
இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி ஜூலை 18 அன்று 4 பக்தர்கள் உயிரிழந்ததனர். இந்த நிலையில், நேற்று (ஜூலை 19) 72 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்திவரதரை தரிசிக்க குறைந்தபட்சம் 4 முதல் 6 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி உள்ளது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் கலெக்டர் ஒரு வேண்டுகோளை வெளியிட்டுள்ளார். அதில், “முதியவர்கள், உடல் நலம் குன்றியவர்கள், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் உள்ளிட்டோர் அத்திவரதரை தரிசிக்க வருவதை தவிர்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வேண்டுகோள் அனைத்து நாளிதழ்களிலும் விளம்பரமாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விளம்பரத்தைப் பார்த்ததும் பக்தர்கள் கொதித்துபோய் உள்ளனர். ஒருவர் தனது வாழ்க்கையில் பெரும்பாலும் ஒரே ஒருமுறைதான் அத்திவரதரை தரிசிக்க முடியும். அப்படி இருக்கும்போது, அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதை விடுத்து, அத்திவரதரை தரிசிக்க வேண்டாம் என்று சொல்வதற்கு கலெக்டர் ஒருவர் தேவையா? என்று ஆவேசமாக கேட்கின்றனர் பக்த்தர்கள்.
கருணாநிதியின் 3 - வது மனைவி ராசாத்தி அம்மாளை வீல் சேரில் அழைத்து செல்ல முடிகின்ற மாவட்ட நிர்வாகத்திற்கு மற்ற வயதானவர்களை ஏன் அழைத்து செல்ல முடியவில்லை? என்று கேட்கின்றனர்.