இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணம்! இந்திய - மியான்மர் எல்லையில் உள்ளூர் பயங்கரவாத குழு கொடூர தாக்குதல்!
இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணம்! இந்திய - மியான்மர் எல்லையில் உள்ளூர் பயங்கரவாத குழு கொடூர தாக்குதல்!
மணிப்பூரில் இந்திய - மியான்மர் எல்லையில் உள்ளூர் பயங்கரவாத குழு நடத்திய தாக்குதலில் 3இந்திய வீரர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் சந்தல் மாவட்டம் மியான்மர் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. அங்கு இந்திய - மியான்மர் எல்லை பகுதியில் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் மறைத்து வைத்திருந்த கண்ணிவெடி தாக்குதலில் இந்திய வீரர்கள் சிக்கினர். இதனைத் தொடர்ந்து துப்பாக்கி மூலமும் உள்ளூர் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில் இந்திய வீரர்கள் 3 பேர் உயிரிழந்ததோடு, மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.